மன்னார் மாவட்டத்தில் வசிப்போர் மற்றும் போரால் இடம்பெயர்ந்தோரின்
பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையில் விசேட குழு
[2017/05/17]
மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப்
பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை
ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் அவர்களது
தலைமையில் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின்
செயலாளர் உள்ளிட்ட வன பாதுகாவல் திணைக்கள அலுவலர்களும் இக் கலந்துரையாடலில்
கலந்த கொண்டனர்.
அப் பிரதேச மக்கள் சில பிரச்சினைகளுக்கு
முகங்கொடுத்திருந்தால் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் விரிவாக
கலந்தரையாடப்பட்டது.
இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி அவர்களின்
ஆலோசனைக்மைய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன் அந்த
அறிக்கை ஒரு மாத காலத்தினுள் வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.
நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம் |