››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் வவுனியாவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு

கடற்படையினரால் வவுனியாவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு

[2017/05/23]

அண்மையில் (மே, 23) வவுனியா மாவட்ட பிரதேச செயலகம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகிய இடங்களில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையங்கள் சிறுநீரக நோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதிதவியின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. இவ் இரண்டு நிலையங்களுடாகவும் சுமார் 790 குடும்பங்கள் தமது நாளாந்த குடி நீர் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தூய குடிநீரை பெற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை நாடு பூராகவும் 202 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படை ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவியாதன் மூலம் சுமார் 100,790 குடும்பங்கள் மற்றும் 75,000ற்கு மேற்பட்ட மாணவர்கள் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, அனுராதபுர மகாபுலன்குலமா மகா வித்தியாலயம், பதவிசிறிபுர ஜயந்திபுர வித்தியாலயம், ஹொரவபொதான ராஸ்னகவெவ, வவுனியா மாமடுவ மற்றும் வெலிஓய பிரதேச செயலகம் ஆகிய இடங்களிலும் குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்