››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் மேலும் வெள்ள நிவாரண உதவிகள்

இராணுவத்தினரால் மேலும் வெள்ள நிவாரண உதவிகள்

[2017/05/30]

மாத்தறை நயிம்பல பிரதேசத்தில் நில்வலா கங்கை அணைக்கட்டின் நீர்கசிவை தடுக்கும் வகையில் மண் மூட்டை இட்டு குறித்த அணைக்கட்டை பலப்படுத்தி பாரிய அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் வவகையில் 28ம் திகதி மாலையிலிருந்து மறுநாள் காலைவரை இலங்கை இராணுவ வீரர்கள் செயட்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இறுதி சடங்குகளுக்கான உதவிகளை காவல்துறையினர், வைத்திய அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தொடர்பான முகவர்கள் ஆகியோரின் ஒத்துளைப்புடன் குறித்த இராணுவ வீரர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை சுமார் 1700 க்கும் அதிகாமான படை வீரர்கள் அனர்த்த நிவாரண பணிகள் உட்பட மீட்பு பணிகள், வெளியேற்றுதல், மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் அமர்த்துதல், வீதிகளின் தடைகளை அகற்றி போக்குவரத்துக்கான வசதிகளை ஏற்படுத்தல், உணவு விநியோகித்தல், படகுகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் காணமல் போனவர்களை தேடும் பணிகளில் ஈடுபடல் போன்ற பல சேவைகளை செய்து வருகின்றனர்.

மேலும் இலங்கை இராணுவத்தின் வைத்திய படைப்பிரிவைச்சர்ந்தவர்கள் களுத்துறை, புளத்சிங்கலா, பஹியங்கலா, கஹதுவ மற்றும் காலி பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 5 படைப்பிரிவைச் சேர்ந்த இலங்கை சிக்னல் படையணியினால் நிவாரண நடவடிக்கையின்போது தொடர்புகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்ளும் வகையில் அவசர பரிமாற்ற வலையமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத

     
     
     
     
     
     
     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

வெள்ள அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருக

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்