இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணிகளில்
[2017/06/01]
இலங்கை இராணுவத்தின் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக,
14 ஆவது மற்றும் 58 ஆவது வப்படைப் பிரிவுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
களுத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தொடர்ந்தும் அனர்த்த
நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பணிகளை மேற்கொள்ள 23 படகுகள், 63 கனரக வாகனங்கள்
13 பீ.டி.ஆர் மற்றும் 18 WMZ மீட்பு வாகனங்கள், 18 பவல் வாகனங்கள் 12
ஐயன்கோஸ் வாகனங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில்
அனர்த்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை, இராணுவத்தினர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவும் வகையில் வீடுகள் மற்றும் வீதிகளை சுத்தம் செய்துவருவதுடன்,
உயிர்காப்பு நடவடிக்கைகள், நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்டவர்களை
பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துதல், கிணறுகளை சுத்திகரித்தல், கங்கைகளின்
அணைக்கட்டுகளில் ஏற்பட்ட வெடிப்புகளை தடுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
மேலும், பாதுகாப்பு படைகளின் பிரதானி அலுவலகத்தினால் 31
ஆம் திகதி மாலை வரை கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 46000 உணவு பார்சல்கள்,
4995கி.கி உலருணவு, 6370 குடிநீர் போத்தல்கள், 1200 கி.கி மருத்துவபொருட்கள்
மற்றும் 27 பாய்கள் என்பன பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
பகிர்ந்தளிக்கப்பட்டது. அத்துடன் இராணுவத்தினரால் இன்று 10000 உணவு
பார்சல்கள் மற்றும் 1500 தண்ணீர் போத்தல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
தொடர்பான
செய்திகள் >>>
|