››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கப்பல் போக்குவரத்து பாதுகாப்பில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது

கப்பல் போக்குவரத்து பாதுகாப்பில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது

[2017/06/05]

இலங்கை கடற்பரப்பினூடாக பயணித்த 10,000 கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கியதன் மூலம் சுமார் 3,510,517,197.10 ரூபாவினை அரசாங்க நிதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை கடற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை கடற்பிராந்தியங்களில் செயற்படுத்தப்படும் நடவடிக்கை மத்திய நிலையங்கள் மூலம் இப்புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

நடவடிக்கை சேவைகளில் கடல்வழி பாதுகாப்பு குழுக்கள் , ஆயுதங்களை பெறுதல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் , வெடிபொருட்கள் மற்றும் வர்த்தக கப்பல் கம்பனிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பதிவு செய்யப்பட்ட சாதனங்கள் போன்றவற்றை ஏற்றி இறக்குதல் என்பன அடங்கும்.

கடற்படையானது, கடல்வழி பாதுகாப்பு குழுவினை அரசிற்கு நிதியினை நேரடியாக பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை மத்திய நிலையங்களை பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்