சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் சிறுநீரக நோய்கள் தொடர்பான விஷேட
விரிவுரை
[2017/06/28]
“நீர்
மாசுருதலும் சிறுநீரக நோய்களும்” எனும் தலைப்பில் பாதுகாப்பு அமைச்சின் சேவா
வனிதா பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு பாதுகாப்பு
அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (ஜுன், 28) இடம்பெற்றது. குறித்த
இக்கருத்தரங்கு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்த்தன
அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறுநீரக நோய்கள் பாதுகாப்பு தொடர்பான
ஜனாதிபதி விஷேட செயலணியின் ஆலோசகர் டொக்டர் கிரிஷான் ராஜசுந்தரம்
அவர்களினால் குறித்த தலைப்பில் விஷேட விரிவுரை ஒன்று நிகழ்த்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வின் இறுதியில் டொக்டர் ராஜசுந்தரம் அவர்களுக்கு நினைவுச்
சின்னமொன்றும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|