முதல் மாற்றீட்டு விமானப்படைகுழு தென் சூடான் பயணம்
[2017/06/28]
தென் சூடான் குடியரசில் அமைதிப்பணியில் ஈடுபடும் ஐ. நா.
அமைதிகாப்பு படையில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை விமானப்படையின் 56
விமானப்படை வீரர்கள் முதல் மாற்றீட்டுக்காக அண்மையில் (ஜுன், 27) நாட்டை
விட்டு புறப்பட்டுச் சென்றனர்.
குறித்த விமானப்படை வீரர்கள் தமது பணிகளுக்காக
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்விற்கு விமானப்படை அதிகாரிகள் மற்றும்
குறித்த விமானப்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.
|