தீயனைப்பில் இராணுவத்தினரின் உதவி
[2017/06/29]
அண்மையில் (ஜூன், 26) கிளிநொச்சி நச்சிக்குடா
பிரதேசத்தில் கடையொன்று திடீரென தீப்பற்றியதை அனைத்து அதனை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கிளிநொச்சி இராணுவப்படையினர்
உதவியுள்ளார். முலன்காவில் பொலிஸ் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலிற்கமைய
கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையாக இராணுவப்படை வீரர்கள் குறித்த பகுதிக்கு
சென்று தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக இராணுவத்தகவல்கள்
தெரிவிக்கின்றன.
சுமார் 40 ற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் துரித
நடவடிக்கையின் காரணமாக குறுகிய நேரத்தில் தீயினை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரமுடிந்ததாகவும், மேலும் பரவாது தடுக்க முடிந்ததோடு இத் தீயினை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உள்ளூர் மக்கள் பெரிதும் ஒத்துழைப்பு
வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
|