››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவாத்தினரால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தற்காலிக வைத்திய களங்கள்

இராணுவாத்தினரால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தற்காலிக வைத்திய களங்கள்

[2017/07/02]

அண்மையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படை பிரிவினால் குறித்த வைத்தியசாலைக்கு டெங்கு நோயாலர்களுக்காக இரண்டு புதிய தற்காலிக வைத்திய களங்கள் நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

மேலும், இதற்குத் தேவையான மருத்துவ உதவிகளை வளங்குவதற்கு இராணுவ மருத்துவ படைப்பிரிவின் 25 இராணுவ வீரர்கள் செயற்பட உள்ளதாகவும், மின்சாரம் மற்றும் மெக்கானிக்கல் பொறியியலாளர் பணியகத்தினால் சேலைன் வழங்குவதற்கு நிறுத்தி வைக்க பயன்படுத்தும் கம்பிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இத்திட்டத்தில் இரத்தப்பரிசோதனைக்கு என பிரத்தியேக ஆய்வுகூடம் ஒன்றும் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்