››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஒய்வு பெற்ற கொடி வரிசை அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஒய்வு பெற்ற கொடி வரிசை அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/07/28]

 

பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன மற்றும் ஒய்வு பெற்ற கொடி வரிசை அதிகாரிகளின் பிரதிநிதிகள் குழுவினருக்கிடையிலான சந்திப்பு இன்றய தினம் (ஜூலை, 28) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பில் குறித்த நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் எச் சரத் ரத்னகீர்த்தி அவர்களின் தலைமையிலான ஒய்வு பெற்ற கொடி வரிசை அதிகாரிகளின் ஆறு பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது அவர்களிடையே குறித்த இந்நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் உறுப்பினர்களுக்கான சேமலாப நலன்புரி முன்னெடுப்புகள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும், இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டீஏஆர் ரணவக்க அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்