அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி
நிறுவன கட்டளைத்தளபதிகளின் 9 வது ஆசிய-பசுபிக் மாநாடு ஆரம்பம்
[2017/08/02]
அமைதி காக்கும் படை
நடவடிக்கைகள் பயிற்சி நிலைய கட்டளைத்தளபதிகளின் 9 வது ஆசிய-பசுபிக் மாநாடு
மற்றும் மற்றும் ஆசிய-பசிபிக் அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி
நிலைய ங்களின் வருடாந்த ஒன்று கூடல் நேற்று (ஆகஸ்ட், 01) கொழும்பு தாஜ்
சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பமாகியது.
குறித்த நிகழ்வில் இராணுவ
தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் பிரதம அதிதியாக கலந்து
கொண்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘அதிகரித்துவரும் வலுவான
அமைதிகாக்கும் மனோநிலையின் சவால்கள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும்
மூன்று நாட்களைக் கொண்ட இம்மாநாட்டில் சுமார் 40 நாடுகளைச்சேர்ந்த
வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதன்போது தொனிப்பொருள் தொடர்பான
பிரச்சினைகள் பற்றிய தனியான அமர்வு ஒன்றும் இடம்பெற உள்ளது.
இம்மாநாட்டில் ஆசியா பசிபிக்
பிராந்தியத்தை பிரதிநிதித்துவ படுத்தும் அவுஸ்ரேலியா, பங்களாதேசம், புருனை,
கம்போடியா, சீனா, பிஜி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மங்கோலியா,
நேபாளம், பிலிப்பைன்ஸ், கொரியா, தாய்லாந்து, வியட்னாம், நியூசிலாந்து,
மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிகழ்வின் முதல் நாள்
அமர்வில், பூகோள சமாதான நடவடிக்கை தோற்றம், பங்களாதேச சமாதான ஒத்துழைப்பு
பயிற்சி நிறுவனம், இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனம்,
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நிறுவனம் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின்
பிரதிநிதிகள் உட்பட இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து
கொள்கின்றனர்.
|