இந்திய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
[2017/08/02]
இந்திய பாதுகாப்பு (பாதுகாப்பு தயாரிப்புக்கள்) செயலாளர்
திரு அசோக் குமார் குப்தா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி
திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 02) பாதுகாப்பு அமைச்சில்
வைத்து சந்தித்தார்.
குறித்த சந்திப்பின் போது இந்திய பாதுகாப்பு செயலாளர்
அவர்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு
முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று
இடம்பெற்றது.
மேலும் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்
சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில், கோவா கப்பல் கட்டும் தள நிறுவனத்தின்
தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஷேக்கர் மிட்டால்
மற்றும் இலங்கைக்கான இந்திய பிரதி உயரிஸ்தானிகர் திரு அரிந்தம் பாக்சி
ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
|