››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/08/16]

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 16) சந்தித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கைக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழுவின் தலைவர் திருமதி. கிளையர் மெய்ற்ரட் (Claire Meytraud) மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றன.

இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு செயலாளர் அவர்களினால் நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதித்தலைவர் திரு. சகரியா மைகா (Zakaria Maiga) அவர்களும் கலந்துகொண்டார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்