முப்படையிலிருந்து தப்பிச்சென்ற
படைவீரர்கள் 777 பேர் ஒரே நாளில் கைது
[2017/08/20]
அனுமதியின்றி நீண்டகால
விடுமுறையிலிருந்து சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு
எதிராக தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்பிரகாரம் இராணுவ பொலிஸ் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட
நடவடிக்கையின் காரணமாக ஒரே நாளில் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற
படைவீரர்கள் சுமார் 777 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர்
பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
முப்படையிலிருந்து தப்பிச்
சென்றவர்களை கைதுசெய்யும் விஷேட நடவடிக்கையினை தொடர்ந்து
மேட்கொள்ளப்போவதாகவும் மற்றும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு(2016)
டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நல்லிரவு வரை அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு
காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச் செல்லாத ஒன்பது படைஅதிகாரிகள்
மற்றும் 5641 படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி நீண்டகால
விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்களுக்கு
சட்டரீதியாக கடமையிலிருந்து விலகுவதற்காக கடந்த ஆண்டு பாதுகாப்பு
அமைச்சினால் இரு முறைகள் பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டு கால அவகாசம்
வழங்கப்பட்டது. அவ்வாண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு
காலத்தைப் பயன்படுத்தி 34 இராணுவ அதிகாரிகள் மற்றும் 8843படைவீரர்கள்
உள்ளிட்டோர் சட்டரீதியாக விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்திகள் >>
|