இராஜாங்க அமைச்சர் “சதஹம் யாத்ரா” போய தின
மத நிகழ்வில் பங்கேற்பு
[2017/10/05]
கம்பஹா பகலகமயின் வரலாற்றுச்
சிறப்புமிக்க யடவத்த புராண விகாரை வித்யாரவிண்ட மகா பிரிவேனாவில் “சதஹம்
யாத்ரா” போய தின மத நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின்
தலைமையில் இன்று (ஒக்டோபர், 05) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கெளரவ. ருவன் விஜேவர்தன அவர்களும் கலந்து
சிறப்பித்துள்ளார்.
குறித்த இப்போயா தின மத
நிகழ்வின் போது 'தம்ம' போதனைகள் மற்றும் மத அனுஷ்டானங்கள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில், அமைச்சர்கள்,
பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் அதிக
எண்ணிக்கையிலான பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
|