இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சருடன் சந்திப்பு
[2017/11/14]
இலங்கைக்கான இந்தோனேசிய
தூதுவர் அதிமேதகு திரு குஷ்தி குரா அர்தியச அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (நவம்பர், 14) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில்
இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்தோனேசிய தூதுவர் அர்தியச மற்றும் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்கள்
இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச்
சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில், இந்தோனேசியா
பல்கலைக்கழக பேராசிரியரும் துணை வேந்தருமான கலாநிதி. தாடங் குணவன் மற்றும்
பல்கலைக்கழக துறைசார் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
|