இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள்
சேவை விலக்கு பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் நீடிப்பு
[2017/11/15]
முப்படைகளிலிருந்து தப்பிச்
சென்றவர்கள், உத்தியோகபூர்வமாக தமது சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான
பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று 15ம் திகதியுடன்
நிறைவடையும் பொதுமன்னிப்புகாலம் எதிர்வரும் 22ஆம் திகதி (நவம்பர், 2017) வரை
நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், இப்
பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி பத்து இராணுவ அதிகாரிகள், எட்டு கெடெற்
அதிகாரிகள் மற்றும் 5400 இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 8052 உத்தியோக பூர்வ
விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்கள் தமது சேவை நிலையங்கள்
ஊடாக சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்காக முறைப்பாட்டினை
மேற்கொண்டுள்ளனர்.
இராணுவத்தினரிடம்
விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இப் பொதுமன்னிப்பு காலம்
நீடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும். இவ் அறியசந்தர்ப்பத்தை பயன்படுத்தி
இம்மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக்
கொள்வதற்கா ஆலோசனைகள் வழங்குமாறு சகல சர்வ மதத்தலைவர்கள், கிராம
உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படைவீரர்களின்
உறவினர்கள் ஆகியோரிடத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, (2017) ஒக்டோபர்
மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின்
அறிவுறுத்தலுக்கு அமைய பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது தொடர்பான செய்திகள் >>
|