2017ஆம் ஆண்டுக்கான இராணுவத்தின் பரா விளையாட்டுப்போட்டிகள் அடுத்த
வாரம் ஆரம்பம்
[2017/11/18]
இலங்கை இராணுவத்தின் 2017ஆம் ஆண்டுக்கான 20ஆவது பரா
விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை
ஹம்பாந்தோட்டை தியகம விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் 450
மாற்றுத் திறனாளிகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் தங்களது விளையாட்டு திறமைகளை
வெளிக்காட்ட உள்ளனர்.
மேலும், இவ்வருடம் முதற்தடவையாக வெளிநாட்டு விளையாட்டு
வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ஆகியோர் பங்குபற்ற உள்ளதாக
கொழும்பு பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர்
மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கை இராணுவ பாரா விளையாட்டுக் குழுத் தலைவர்,
மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ, இராணுவ ஊடக மைய பணிப்பாளர், மேஜர் ஜெனரல்
ரொஷான் செனவிரத்ன, இராணுவ பாரா விளையாட்டுக் குழுவின் பிரதித்தலைவர்
பிரிகேடியர் ராஜீவ் விக்ரமசிங்க ஆகியோர் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து
கொண்டனர்.
|