››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடுமையாக சுகவீனமுற்ற மீனவருக்கு கடற்படையின் உதவி

கடுமையாக சுகவீனமுற்ற மீனவருக்கு கடற்படையின் உதவி

[2018/01/31]

கடுமையான சுகவீனமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை கடற்படையினர் திங்களன்று (ஜனவரி, 29) உதவியுள்ளனர்.

காவல்துறையினரால் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கமைய விரைந்து செயற்பட்ட கிழக்கு கடற்படை கட்டளையக மீட்புப்பணிகளுக்கான அதிவேக தாக்குதல் படகு P 465, 8.5 கடல் மைல்களுக்கு அப்பால் சென்று மீன்பிடிப்படகிலிருந்த சுகவீனமுற்ற மீனவரை கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

திடீர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட இம்மீனவர் உடனடியாக கடற்படை படகின்மூலம் பாதுகாப்பாக திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் அவசரமாக மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்