இடம்பெயர்ந்த மக்களுக்கு புதிய வீடுகள் வழங்கி வைப்பு
[2018/03/31]
அண்மையில் (மார்ச், 30) யாழ் நல்லிணக்கபுர கிராமம்
வீடமைப்பு திட்டத்தின் கீழ் நலன்புரி மையங்களில் வசித்து வரும் 25
குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக புதிய வீடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட வீடமைப்புத் திட்ட கட்டுமானப்பணிகள்
முப்படையினரின் ஒத்துழைப்புடன் நிறைவுசெய்யப்பட்டு உரியவர்களுக்கு வழங்கி
வைக்கப்பட்டுள்ளது.
கீரமலை திட்டத்தின் படி, 20 பேச்சர் காணியில் ஒவ்வொரு
வீட்டுத் தொகுதிகளும் 1 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகள் ஒரு படுக்கையறை , வரவேட்பறை மற்றும் சாப்பாட்டு அரை, சமையல்
அறை, கழிப்பறை மற்றும் ஒரு குளியலறை ஆகியவற்றுடன் இப்புதிய வீடுகள் நிறைவு
செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் நீர் மற்றும் மின்சாரம்
வழங்குவதற்கு கூடுதலாக, சாலைகள், சமூக மையம், வடிகால் அமைப்புகள் மற்றும்
நீர் சுத்திகரிப்பு ஆலை போன்ற பொது வசதிகளும் இந்த திட்டத்தில்
உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட
செயலாளர் திரு. நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் வருகை தந்தார். அத்துடன்
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் யாழ் மாவட்ட
செயலாளர் அவர்களினால் இவ் வீடுகள் உத்தியோகபூர்வமாக உரிமையாளர்களுக்கு
வழங்கி வைக்கப்பட்டன.
2016 ஆம் ஆண்டு நல்லினக்கபுரம் வீட்டுத் திட்டத்தின்
முதற்கட்டமாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால்
வீடுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் இடம்பெயர்ந்த முகாம்களில் வாழ்ந்து
வருகின்ற மக்களுக்கு நேற்று இரண்டாம் கட்டமாக 25 வீடுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்
தர்ஷன ஹெட்டியாரச்சி, 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல்
ரொஷான் செனெவிரத்ன, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|