››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு செப்டம்பரில

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு செப்டம்பரில

[2018/05/02]

 

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு இவ்வருடம் (2018) செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு “இணக்கப்பாட்டின் மூலம் தொழில்முறை உயர்தன்மையை பாதுகாத்தல்” எனும் தொனிப் பொருளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்நிகழ்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடவியலாளர் மாநாடு இன்று (மே, 02) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இவ்வருட சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஆரம்ப உரை பேராசிரியர் மொஹான் முனசிங்க அவர்களால் நிகழ்த்தப்பட உள்ளது. இவர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் பிரதித்தலைவரும், 2007 ஆம் ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவரும். 2030 பேண்தகு இலக்கு என்பதன் ஜனாதிபதி நிபுணர்கள் குழுவின் தலைவராகவும் செயற்பட்டுவருகிறார். மேலும், இம் மாநாட்டில் உரையாற்றுவதற்காக வெளிநாட்டு பிரபலமான இலங்கை புத்தி ஜீவிகள் இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) மேஜர் ஜெனெரல் இந்துநில் ரணசிங்க, கற்கைநெறிகளுக்கான பிரதி உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த ஆரியரத்ன ஆகியோரால் இன்று காலை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு இம்மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

ஒரு உலகத்தரம் வாய்ந்த அமைப்பான சர்வதேச ஆய்வு மாநாடானது வல்லுனர்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் பெறுமதிமிக்க ஆய்வுகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த ஒரு தளமாக காணப்படுகிறது. இலங்கையின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அறிவார்ந்த இவ் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் அவர்களது ஆய்வுகளை சமர்ப்பிக்கவும், கலந்துரையாடவும் மற்றும் அவர்களது ஆய்வுகளின் கண்டறிதல்களை சக மற்றும் வல்லுநர்களுடன் கலந்துரையாடவும் முடியும்.

இவ்வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இச்சர்வதேச ஆய்வு மாநாடாட்டின் 11 வது பதிப்பிற்கான ஆய்வுக்கட்டுரைகளை ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் தங்கள் விரிவான கருத்துக்களையோ அல்லது முழு ஆவணங்களையோ சமர்ப்பிக்கலாம். இதற்கான முடிவுத்திகதி இம்மதாம் 15ஆம் திகதியாகும். கடந்த வருடம் (2017) நடைபெற்ற சர்வதேச ஆய்வு மாநாடாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் 500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி தொடர்பான பத்திரிகைகள் சமர்பிக்கப்பட்டதுடன், அவற்றில் 365 பத்திரிகைகள் வெளியிடப்பட்டது. 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சர்வதேச ஆய்வு மாநாடாட்டின் ஆரம்பநிகழ்வில் 35 ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. இதனை ஒப்பீட்டு ரீதியாக அவதானிக்கும்போது இம்மாநாட்டின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தினை காணக்கூடியதாக உள்ளது.

இவ்வருட ஆய்வு மாநாட்டில் பாதுகாப்பும் உத்திகளுக்குமான கற்கைகள், பொறியியல், அடிப்படை மற்றும் பிரயோக அறிவியல், கணனியியல், தகவல் தொழிநுட்பம், முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், மனிதாபிமானம், சட்டம், மருத்துவம், சுற்றுச்சூழல் நிர்மாணம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார அறிவியல், என்பன உள்ளடங்கிய அமர்வுகள் இடம்பெறவுள்ளன. எனவே இக் கல்வி தொடர்பாக தமது ஆய்வுகளை சமர்பிக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒத்துழைப்புடன் இம் மாநாடு சிறப்பிக்கப்படும்.

இவ்வருடம் இடம்பெறும் இச்சர்வதேச மாநாட்டில் பல்வேறு புதிய வசதிகளாக ஸ்கைப் ஊடாக தமது முன்வைப்புக்களை மேற்கொள்ளவும் மற்றும் பங்கேற்பாளர்கள் டிஜிட்டல் நூலக வசதிகளை பயன்படுத்தவும் முடியும். மேலும் இம்மாநாட்டில் தெரிவு செய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சஞ்சிகையிலும் வெளியிடப்படும்.

இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழகமானது 1981ஆண்டின் பாராளுமன்ற சட்டத்தின் 68ஆம் இலக்கத்தின் பிரகாரம் “ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டு பின்னர் 1988 ஆண்டின் பாராளுமன்ற சட்டத்தின் 27ஆம் இலக்கத்தின் பிரகாரம் பல்கலைக்கழக தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டது. இதன் பிரகாரம் பாதுகாப்பு கற்கைகளில் இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்களை வழங்குவதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது. பொதுநலவாய பல்கலைக் கழகங்கள் (அமெரிக்கா) சங்கத்தின் அங்கத்துவம் பெற்றுள்ள இப்பல்கலைக்கழகம், அதன் கல்வித்தரத்தினை நிலைநாட்டும் வகையில் கடட் அதிகாரிகளுக்கு நவீன பாதுகாப்பு முகாமைத்துவத்தில் எதிகொள்ளும் சவால்களை முகம் கொடுக்கும் வகையிலான தரமான கல்வியினை வழங்குகிறது.

தற்போது 250 வெளிநாட்டு மாணவர்கள் உட்பட சுமார் 6200 இளங்கலை மாணவர்கள் எழு துறைகளினூடாக வழங்கப்படும் பல்வேறு கற்கை நெறிகளை தொடர்கின்றனர். இதன் பிரதான பல்கலைக்கழகம் இரத்மலானையிலுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமும், சூரிய வெவ யிலுள்ள தெற்கு பல்கலைக்கழகம் மற்றும் வேறஹர யிலுள்ள பல்கலைக்கழக வைத்தியசாலை ஆகியனவும் காணப்படுகின்றன.

இந்நிகழ்வில், 2018ஆம் ஆண்டு சர்வதேச ஆய்வுகள் மாநாட்டின் தலைவர் கலாநிதி உபாலி ராஜபக்ஷ் மற்றும் மாநாட்டின் செயலாளர் திருமதி பாக்யா சேனாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்

மேலதிக தகவலுக்கு இணையத்தள முகவரி : www.kdu.ac.lk/irc2018 பார்வையிடவும்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்