மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக
படையினர்களால் குருநாகல் பிரதேசத்தில் முறிந்த மரங்களை அகற்றும் பணிகளில்
[2018/06/10]
குருநாகல் மாவட்டத்தில்
வெவகெதர, தித்தவெல,கலஹொகொதர, போன்ற பிரதேசத்தில் (09) ஆம் திகதி சனிக் கிழமை
காலை ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நிவாரணம் வழங்க இராணுவ அதிகாரிகள் உட்பட் 100 க்கும் அதிகமான படையினர்களின்
பங்களிப்புடன் நடவடிக்கைகள் மேற் கொண்டனர்.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட
இந்த அனார்த்ததுக்கு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும்
143 ஆவது படைப் பிரிவின் 1 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின்
படையினர் மற்றும் 582 ஆவது படைப் பரிவின் படையினர்களால் முறிந்து விழுந்த
மரங்களை வெட்டி அகற்றி பாதிப்புக்குள்ளன மக்களை மீட்கும் நடவடிக்கைகள்
மேற்கொண்டனர்.
இப் படையினர்களால்
பிற்பகல்வரை, மரங்களை வெட்டி அகற்றி பகுதிகளை சீரமைக்க முடிந்தது..
நன்றி : இராணுவ செய்தி ஊடகம்
|