››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவ சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர்கள் சாதனை

இராணுவ சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர்கள் சாதனை

[2018/06/12]

அண்மையில் தைபே இல் இடம்பெற்ற சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டி – 2018 இல் கலந்துகொண்ட இலங்கை இராணுவத்தை சேர்ந்த சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர்கள் ஆண்களுக்கான இரட்டையர் சாம்பியன்ஷிப் வெற்றியைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (ஜூன், 09) நிறைவடைந்த ஆண்களுக்கான இப்போட்டியில் இலங்கை பீரங்கிப்படையை சேர்ந்த லான்ஸ் பொம்போடியர் D.A.S.R தர்மசேன மற்றும் கஜபா படைபிரிவை சேர்ந்த கோப்ரல் R.A.L.S ரணவீர முதல் சுற்றில் 7 க்கு 5 எனும் புள்ளிகள் மற்றும் இரண்டாவது சுற்றில் 6 க்கு 3 எனும் புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று “கொசிஉங்” பட்டத்தை பெற்றுள்ளனர்.

உலக சாம்பியன் புஜிமோடோவை அரை இறுதிப்போட்டியில் தோற்கடித்தது, இலங்கை இராணுவத்தை சேர்ந்த லான்ஸ் பொம்போடியர் D.A.S.R தர்மசேன ரணனர் அப் ஆக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான சர்வதேச போட்டியொன்றில் சாதனை படைத்துள்ளமை இதுவே முதல் தடவையாகும். நூற்றுக்கும் அதிகமான சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர்கள் கலந்துகொள்ளும் இப்போட்டியில் பல்வேறு நாடுகளின் பயிற்று விப்பாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்