கிளிநொச்சியில் சமூக நலன்புரி நிகழ்வுகள் இராணுவத்தினரால் முன்னெடுப்பு
[2018/06/13]
இலங்கை இராணுத்தின் கிளிநொச்சி படைபிரிவினர் அப்பகுதியில்
உள்ள முளங்காவில் கோயில் வளாகத்தினுள் சிரமதானப் பணிகளை கடந்த வாரம் (ஜூன்,
07).முன்னெடுத்துள்ளனர். மத குருமார்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு
அமைய குறித்த சிரமதான பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். கோயில்
வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் அதனை
சுற்றி அழகுபடுத்தி அதன் புனிதத்தன்மையை பாதுகாக்கும் வகையில் சிரமதான
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இவ்வாறானதொரு சிரமதான பணி கிளிநொச்சி கல்விளான்
அரச தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் 100 க்கும் அதிகமான இராணுவத்தினர் தங்களது பணிகளை வெற்றிகரமாக
முன்னெடுத்துள்ளனர்.
|