பிரான்ஸ் கடற்படை கப்பல்கள் இலங்கை வருகை
[2018/06/14]
நல்லெண்ண விஜயமொன்றை
மேற்கொண்டு பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான பிஎன்எஸ் 'டிக்ஸ்மட்' மற்றும்
'சொர்கௌப்' ஆகிய கப்பல்கள் இன்றையதினம் (ஜுன், 18) இலங்கைக்கு
வருகைதந்துள்ளன. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பல்களுக்கு, இலங்கை
கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன.
இரு கப்பல்களின் கடற்படை
சிப்பாய்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், தரித்திருக்கவுள்ள
இக்கப்பலின் சிப்பந்திகள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும்
நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு
பயிற்சி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வுகளில் இலங்கை கடற்படையின்
10 அதிகாரிகள் மற்றும் பிரான்ஸ் கடற்படை வீரர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
|