கும்பல்திவல ஸ்ரீ சத்தர்மமோதய பிரிவெனாவின்
அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
[2018/08/27]
பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கும்பல்திவல ஸ்ரீ சதர்மமோதய
பிரிவெனாவிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வு கேகாலை, கும்பல்திவெல ஸ்ரீ சத்தர்மமோதய பிரிவெனாவில் நேற்று (ஆகஸ்ட்,
26) இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு வருகை தந்த
இராஜாங்க அமைச்சரை விகாரையின் பிரதம விரயாதிபதி வண. நவகமுவெ ஸ்ரீ
சத்தர்மகீர்த்தி ஸ்ரீ சுமங்கள தேரர் வரவேற்றார்.
விகாரையின் மகா
சங்கத்தவர்களின் அனுசாசனத்துடன் இப்புதிய பிரிவெனாவிற்கான அடிக்கல்லினை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன அவர்கள் நாட்டிவைத்தார்.
இவ்வைபத்தில் மகா
சங்கத்தினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், பெருமளவிலான
பக்தகோடிகள் உள்ளிட்ட பலர் வருகை தந்தனர்.
|