மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டி நிகழ்வில்
பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு
[2018/09/09]
பாதுகாப்பு அமைச்சினால்
ஏற்பாடு செய்யப்பட வருடாந்த சினேகபூர்வ மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டி
நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன
அவர்கள் தலைமையில் நேற்று (செப்டம்பர், 08) இடம்பெற்றது.
இதன்போது, பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர அவர்களும் கலந்துகொண்டார்.
கொழும்பு விமானப்படை
விளையாட்டுமைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வில் பத்து அணிகளைக்கொண்ட
வீரர்கள் குழுவினர் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக
போட்டியிட்டனர். பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் முப்படை மற்றும் சிவில்
உறுப்பினர்களை சேர்ந்த இளம் மற்றும் வயதான பணியாளர்கள் இவ்விளையாட்டு
குழுவில் பங்கேற்றனர். ஒவ்வொரு குழுவிலும் பெண் வீராங்கனைகள் அங்கத்துவம்
வகித்தமை விஷேட அம்சமாகும்.
கடும் போட்டிகளுக்கு
மத்தியில் தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து பிரிவுகளை சேர்ந்த அணியினர்
இறுதிச்சுற்றுக்கு தெரிவாகினர். இவர்களுக்கிடையே நிலவிய கடும் போட்டியில்
வெற்றிபெற்ற தொழில்நுட்ப பிரிவு அணியினர் இறுதியில் சாம்பியன் பட்டத்தை
வென்றனர்.
அமைச்சின் நலன்புரி
நிலையத்தினால் நடாத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டி நிகழ்வில் வெற்றி பெற்ற
அணியினர் மற்றும் தமது திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் ஆகியோருக்கு
வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மேலதிக
செயலாளர்கள், விமானப்படை தளபதி, அமைச்சின் உயர் அதிகாரிகள், உட்பட அமைச்சில்
பணிபுரியும் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் பார்வையாளர்களாக கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.
|