இந்தோனேசிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை
[2018/09/08]
இந்தோனேசிய கடற்படைக்கு
சொந்தமான “கிரி சுல்தான் ஹசனுட்டின்” கப்பல் மூன்று நாள் உத்தியோகபூர்வ
விஜயமொன்ரை மேற்கொண்டு இன்று (செப்டம்பர், 08) இலங்கை வந்தடைந்துள்ளது.
இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி
வரவேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கப்பலில் வருகைதந்த
சிப்பந்திகள் இலங்கையில் தரித்திருக்கும் வேளையில் இலங்கை கடற்படையினருடன்
இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும்
“கிரி சுல்தான் ஹசனுட்டின்” இம்மாதம் (செப்டம்பர் ) 10ஆம் திகதி நாட்டை
விட்டு புறப்பட்டுச்செல்ல திட்டமிட்டுள்ளது.
|