››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

எண்ணெய் கசிவினை கட்டுப்படுத்த படையினர் விரைவு

எண்ணெய் கசிவினை கட்டுப்படுத்த படையினர் விரைவு

[2018/09/10]

கொழும்பு திகோவிட கடலோரப்பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணைக்கசிவினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்படை, கடலோரகாவட்படை மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். முத்துராஜவெல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்லப்படும் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் கடலில் எண்ணெய் மிதப்பததுடன் கடலோரம் மாசடைந்தும் காணப்படுகிறன.

நூற்றுக்கணக்கான கடற்படை மற்றும் இராணுவ வீரர்களுடன் கடலோர காவற்படையினர் இணைந்து கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்கள நிபுணர்களுடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆகியோர் எண்ணெய் கசிவை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை ஜப்பான் நாட்டினால் அன்பளிப்பு செய்யப்பட “ சமரக்க்ஷா” மற்றும் “சமுத்திர ரக்க்ஷா” ஆகிய இலங்கை கடலோர பாதுகாப்பு கப்பல்கள் எண்ணெய் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்