››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பங்களாதேஷிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை

பங்களாதேஷிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை

[2018/09/12]

பங்களாதேஷிய கடற்படைக்கு சொந்தமான “சொமுத்ரா ஜோய்” கப்பல் ஐந்து நாள் நல்லெண்ண விஜயமொன்ரை மேற்கொண்டு இன்று (செப்டம்பர், 12) இலங்கை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

115.2மீட்டர் நீளமும் 13.1மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பலில் வருகை தந்த 278 கடற்படை சிப்பாய்கள் இலங்கையில் தரித்திருக்கும் வேளையில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கப்பல் இம்மாதம் (செப்டம்பர் ) 16ஆம் திகதி நாட்டை விட்டு செல்ல உள்ளத.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்