››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தென் சூடான் குடியரசில் அமைதி காக்கும் வீரர்களுக்கு இலங்கை விமானப்படை பிரிவினரால் முதற்கட்ட பயிற்சிகள்

தென் சூடான் குடியரசில் அமைதி காக்கும் வீரர்களுக்கு இலங்கை விமானப்படை பிரிவினரால் முதற்கட்ட பயிற்சிகள்

[2018/09/14]

தென் சூடான் குடியரசில் அமைதிப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு இலங்கை விமானப்படை பிரிவினரால் கடந்த செவ்வாய்கிழமையன்று (செப்டெம்பர், 11)முதற்கட்ட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. இங்கு பணிபுரியவுள்ள வீரர்களுக்கு இம்முதற்கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நைல் நதியில் முன்னெடுக்கப்பட்ட பயிற்சியில் நோயாளி ஒருவரை மீட்டு பாதுகாப்பாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லும் பயிற்சி இதன்போது வழங்கப்பட்டது.

தென் சூடான் குடியரசில் அமைதிப்பணியில் ஈடுபட்டுள்ள ஐ. நா. வின் அமைதி காக்கும் படைகளின் பிரதம விமானப்படை அதிகாரி திரு. சாமுவேல் அப்ரோக்வா அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்