எதிரிகளின் இலக்குகளை முறியடிக்கும்
நீர்க்காக தாக்குதல் பயிற்சியில் படையினர்
[2018/09/20]
‘நீர்க்காக தாக்குதல்–
IX 2018’ பயிற்சியான கள முனைப்
பயிற்சியில் பங்கேற்கும் படைவீரர்கள் மேலும் இரண்டு பயிற்சி நடவடிக்கையினை
இம்மாதம் (செப்டம்பர்) 17ஆம் திகதி
திங்கட்கிழமையன்று மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, தலை மன்னார்
மற்றும் ஆண்டான்குளம் ஆகிய பிரதேசங்களின் பொது இடங்களில் மறைந்திருக்கும்
எதிரிகளை உயிருடன் பிடிக்கும் பயிற்சி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இதேதினத்தில் அட்டைமுரிப்புக்குளம் பகுதியில் ஸ்னைபர் ஆயுதங்களை
பயன்படுத்தி எதிரிகளை தாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தினரால்
தொடர்ச்சியாக 9வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு, இம்மாதம் வியாழக்கிழமை
(06) ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டுப் பயிற்சியில்
2500 இராணுவ வீரர்கள்,
400 கடற்படை வீரர்கள்,
200 விமானப்படை வீரர்கள் மற்றும்
100 வெளிநாட்டு இராணுவ வீரர்களும்
பங்கேற்கின்றனர். இப்பயிற்சி நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ்,
பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம்,
நைஜீரியா, பாக்கிஸ்தான், ரஷ்யா, சிங்கப்பூர், சூடான், துருக்கி,
பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளின் பாதுகாப்புப்
படைவீரர்கள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு, மத்திய, மேற்கு
மற்றும் வட மத்திய மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இக்களப் பயிற்சிகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குச்சவெளி பிரதேசத்தில்
26 ஆம் திகதி இடம்பெறும் “விமர்சன
ஈடுபாட்டு” நிகழ்வு நிறைவுடன் இக்களமுனைப்பயிற்சி நிறைவுபெற உள்ளது.
அத்துடன் மறுநாள் இப்பயிற்சிக்கான இறுதி நிகழ்வுகளும் இடம்பெற உள்ளமை
குறிப்பிடத்தக்கது.
|