››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விமானப்படை பெல் 212 உலங்குவானூர்தி மூலம் பெலவத்த தீ கட்டுப்பாட்டுக்குள்

விமானப்படை பெல் 212 உலங்குவானூர்தி மூலம் பெலவத்த தீ கட்டுப்பாட்டுக்குள்

[2018/10/12]

இலங்கை விமானப்படையின் பெல் 212 உலங்குவானூர்தி மூலம் நீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு பத்தரமுல்ல பெலவத்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை நேற்று (ஒக்டோபர், 11) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

பெலவத்த ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தே இவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வேகமாக தொழிற்சாலைக்குள் பரவிய தீ அருகிலுள்ள கட்டடங்களுக்கும் பரவவாது தடுக்கப்பட்டுள்ளது. இராணுவ மற்றும் விமானப்படை வீரர்கள் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவியதுடன் நீண்ட நேரமுயற்சியின் பின்னர் தீ அணைக்கப்பட்டது.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முன்னர் உலங்குவானூர்தி மூலம் 17 தடவைகள் நீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக விமானப்படை தீயணைப்பு பொறியியலாளர்கள் மற்றும் நீர் வழங்குனர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்