தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் பட்டம்
விமானப்படை வசம்
[2018/12/14]
இலங்கை விமானப்படை இவ்வருட
தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளனர்.
இப்போட்டியில் கலந்துகொண்ட விமானப்படை வீரர்கள் மூன்றாவது முறையாகவும்
சாம்பியன்ஷிப் பட்டத்தை தமதாக்கயுள்ளதாக இலங்கை விமானப்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கொழும்பு விளையாட்டு
அமைச்சின் உள்ளக அரங்கத்தில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான (2018) தேசிய
டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படையின் ஆண்கள் மற்றும்
பெண்கள் பிரிவினர் வெற்றிபெற்றுள்ளனர். இப்போட்டிகள் இம்மாதம் (டிசம்பர்)
07ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகளில் விமானப்படை
அணியினர் ஒன்பது தங்கப் பதக்கங்கள், நான்கு வெள்ளி பதக்கங்கள் மற்றும்
மூன்று வெண்கல பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 18 பதக்கங்களை
பெற்றுக்கொண்டது. இப்போட்டியில் லீடிங் விமானப்படை வீராங்கனை ரணசிங்க RASP
சிறந்த டேக்வாண்டோ வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார். விமானப்படை
டேக்வாண்டோ அணி 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குறுகிய
காலத்திற்குள் வியத்தகு வெற்றிகளை பெற்றுள்ளது. |