››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரின் உதவியுடன் உலர் உணவு பொருட்கள் வினியோகம்

இராணுவத்தினரின் உதவியுடன் உலர் உணவு பொருட்கள் வினியோகம்

[2019/01/05]

இலங்கை இராணுவத்தினர் அண்மையில் யாழ் குடாநாட்டில் குறைந்த வருமானம் பெரும் சுமார் 335 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வினியோகித்துள்ளனர். இதன் பிரகாரம் கரவெட்டி, குடாரப்பு,புனிதநகர்,சுழிபுரம் மற்றும் அரியாலை ஆகிய கிராமங்களை சேர்ந்த தகுதியுடைய குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவு பொருட்கள் வினியோகிக்கப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்புதுவருடத்தில் நல்லெண்ணம் மற்றும் சகவாழ்வு என்பற்றை நோக்காகக்கொண்டு குறைந்த வருமானம் பெரும் மக்கள் மத்தியில் இவ் உலர் உணவு பொதிகளை விநியோகிக்க அஸ்கிரிய பீடத்தின் பிரதான பௌத்த மதகுருவான வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் அவர்கள் அனுசரனை வழங்கியுள்ளார்.

இப்பொதிகள் வினியோகிக்கும் வைபவத்தில், யாழ் பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்