நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள
முதலாவது மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை மாதிரிகள்
ஜனாதிபதியிடம் கையளிப்பு
[2019/02/28]
இலங்கையில் முதன்முறையாக
நிர்மாணிக்கப்பட்டுள்ள மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை
மாதிரிகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் நேற்று
(26) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து
கையளிக்கப்பட்டன.
கடந்த கால யுத்த அனுபவங்களை
பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஆராய்ச்சி, அபிவிருத்தி
நிலையத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது மல்டி பெரல் ரொக்கட்
லோன்ஜர் மற்றும் ஏவுகனை கடந்த 71வது
தேசிய தின விழாவின்போது காட்சிப்படுத்தப்பட்டன.
ஆராய்ச்சி, அபிவிருத்தி
நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கலாநிதி டிரான் டி சில்வாவினால்
இந்த மாதிரி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
நன்றி: pmdnews.lk |