››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ரஷ்ய கடற்படைக் கப்பல் இலங்கை வருகை

ரஷ்ய கடற்படைக் கப்பல் இலங்கை வருகை

[2019/04/04]

இரண்டு நாட்கள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த சோவியத் யூனியன் கோஷ்கோவ் எனும் கப்பல் நேற்று (ஏப்ரல், 03) இலங்கையை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான இக்கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

136 மீட்டர் நீளமான இக்கப்பலில் 28 கடற்படை அதிகாரிகள் உட்பட 208 கடற்படை சிப்பாய்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. இரண்டு நாட்கள் தரித்திருக்கவுள்ள இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல், 06) நாட்டை விட்டு புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்