நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச்
செயலாளருடன் சந்திப்பு
[2019/04/05]
இலங்கைக்கான நியூசிலாந்து
உயர்ஸ்தானிகர் அதிமேதகு திருமதி ஜோஅன்ன மேரி கெம்கர்ஸ் அவர்கள் பாதுகாப்பு
செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஏப்ரல்,
05) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில்
இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும்
பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த
விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது,
இருவருக்கிடையே நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில், பாதுகாப்பு
அமைச்சின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனெரல் டி ஏ ஆர் ரணவக்க
அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
|