››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

‘இராணுவ கலந்துரையாடல் - 2019’

‘இராணுவ கலந்துரையாடல் - 2019’

[2019/07/26]

‘இராணுவ கலந்துரையாடல் - 2019’ நிகழ்வின் மூன்றாவது அமர்வு ரத்மலான இலங்கை விமானப்படை தளத்தில் அண்மையில் இடம்பெற்றது. இலங்கை விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாட்களைக் கொண்ட இக்கலந்துரையாடல், நல்லிணக்க வழிமுறைகள் ஒருங்கிணைப்பு செயலகத்தின் முன்னெடுப்புடன் கடந்த திங்கள் கிழமையன்று (ஜுலை, 22) ஆரம்பமானதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘இராணுவ கலந்துரையாடல் - 2019’ நிகழ்வானது, இலங்கையில் நிலைபேறான சமாதனம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஈடுபாடு தொடர்பாக முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புபடை வீரர்களுக்கு விளக்கமளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புபடை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்