பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்
பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
[2019/09/04]
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்
ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், கேணல் சஜ்ஜாத் அலி அவர்கள் பாதுகாப்பு
செயலாளர், ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி
வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டெம்பர், 04) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில்
இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு
ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு
முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று
இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பாதுகாப்பு
அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி, பிரிகேடியர் டீஎம்ஏபீ திசாநாயக்க
அவர்களும் கலந்து கொண்டார்
|