புதிய இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ டபிள்யூ ஜே
கிரிஷாந்த டி சில்வா பாதுகாப்புச் செயலாளர் திரு. பி. எம். யூ. டி
பஸ்நாயக்க அவர்களை இன்று காலை (26ஆம் திகதி செவ்வாய்க் கிழமைஇ பெப்ரவரி
2015) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாதுகாப்பு அமைச்சில் இந்த
சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையின் 21வது இராணுவ தளபதியாக தனது கடமைகளை
பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் மரியாதை நிமிர்த்தம் இடம்பெற்ற முதலாவது
சந்திப்பு இதுவாகும்.
இந்த நல்லெண்ண சந்திப்பின் போது பல்வேறு முக்கிய
விடயங்கள் குறித்து கலந்தாலோசித்ததுடன் பாதுகாப்புச் செயலாளர் மற்றும்
புதிய இராணுவத் தளபதி ஆகிய இருவரும் ஞாபகச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.
|