இலங்கைக்கான ஜேர்மன்
குடியரசியின் தூதுவர், கலாநிதி ஜே ஏர்ஜன் மொஹாட் அவர்கள் பாதுகாப்புச்
செயலாளர் திரு.கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை இன்று (நவம்பர் 03)
சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது
செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் ஜேர்மன் குடியரசியின்
தூதுவர், கலாநிதி ஜே ஏர்ஜன் மொஹாட் அவர்களுக்குமிடையில் சினேகபூர்வமான
கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த
செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.