மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/23/2016 4:24:22 PM பாதுகாப்பு செயலாளர் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பு

பாதுகாப்பு செயலாளர் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பு

கொழும்பு மேல்மாகாண நுன்வரைகலை மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய சமாதான மன்றத்தின் (ஜாதிக சமகி சங்கமய) வருடாந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வானது இலங்கை குடியரசு தினம் (மே,22), சர்வதேச உயிரியல் பல்வகைமை தினம் (மே,21), உலக கலாச்சார தினம் (மே, 22) ஆகிய தினங்களையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரன்பண்டா ஜெயவர்தன அவர்கள் வரவேற்றார்.

இதேவேளை, இங்கு உரை நிகழ்த்திய செயலாளர் ஹெட்டியாராச்சி அவர்கள் நல்லிணக்கத்தின் அவசியம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்து சுட்டிக்காட்டினார்.

மேற்படி நிகழ்வில் மதகுருமார்கள்,அதிதிகள், பல்வேறு மன்றங்களை பிரநிதித்துவப் படுத்தும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்