அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண
பணிகளில் இராணுவத்தினர்
[2016/05/24]
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அரநாயக்க பிரதேசத்திலிருந்து
இதுவரை 24 சடலங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. இதற்கமைய 6
குழந்தைகளினது சடலங்களும், 17 ஆண்களினது சடலங்களும், 6 பெண்களது சடலங்களும்
காணப்படுகின்றன. அங்கு தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
மேலும், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அரநாயக்க மற்றும்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு ஆகிய பகுதிகளில் ஏராளமான நடமாடும்
மருத்துவ முகாம்ங்கள் இராணுவத்தினரால் நிறுவப்பட்டது.அத்துடன் வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வகையில்
இராணுவ சேவா வனிதா பிரிவு உலர் உணவு, ஆடைகள், பால் மா மற்றும் பல
அத்தியாவசியப் பொருடகளையும் அனுப்பிவைத்துள்ளது.
தங்கி இருந்த வெள்ள நீர் வேகமாக வெளியேருவதாலும் இடம்
பெயர்ந்த மக்கள் தமது இடங்களுக்கு திரும்பி செல்ல ஆரம்பித்து இருப்பதாலும்
அனைத்து கட்டளை அதிகாரிகளும் அனர்த்தத்தின் பின்னரான நடவடிக்கைள் பற்றி
விழிப்பாய் இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி அறிவுறுத்தியுள்ளார்.
|