புதிய விமானாப்படைத்தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2016/09/21]
இலங்கை விமானப்படையின் 16வது விமானப்படைத்தளபதியாக தனது
கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்ட எயார் மார்ஷல் கபில ஜயம்பதி
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.ருவன் விஜேவர்தன அவர்களை இன்று
(செப்டம்பர்.21) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
விமானப்படைத்தளபதி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சிநேகப்பூர்வமான சந்திப்பின் போது இருதரப்பு
முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் எயார் மார்ஷல் கபில
ஜயம்பதி அவர்களினால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில்
நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
|