பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
[2017/01/06]
பிஎம்எஸ்எஸ் ஹிங்கோல் மற்றும் பிஎம்எஸ்எஸ் பசோல் எனும்
இரு பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்றைய
தினம் (ஜனவரி 05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த இக்கப்பல்களை
இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
மேலும், மூன்று நாட்கள் தரித்திருக்கவுள்ள இக்கப்பலின்
சிப்பந்திகள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை
பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு
நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் குறித்த இக்கப்பல்கள் இரண்டும் இம்மாதம்
எட்டாம் திகதி புறப்படவுள்ளதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
|