சீன கடற்படையின் சமுத்திரவரைபட ஆய்வுக்
கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
[2017/02/02]
சீன
மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் சமுத்திரவரைபட ஆய்வுக் கப்பலான “குவான்
சன்கியாங்” நேற்று (பெப்ரவரி.01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை
தந்த குறித்த இக்கப்பல் சில முக்கிய தொழிநுட்ப காரணங்களுக்காக இங்கு சிறிது
தரித்திருக்கவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு துறைமுகத்துக்கு
வருகை தந்த குறித்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை
மரபுகளுக்கமைவான சம்பிரதாய பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது. மேலும், இக்கப்பல்
எதிர்வரும் ஆறாம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கவுள்ளது. |