முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது
[2017/03/03]
கடந்த (2016) ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை வழங்கப்பட்ட
பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை
வீரர்களுக்கு எதிராக முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் தொடர்ந்தும்
சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்பிரகாரம் இதுவரை (2017
மார்ச், 01) சுமார் 1500 முப்படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 1149 இராணுவத்தினர்
மற்றும் 3 இராணுவ அதிகாரிகள் , 327 கடற்படைவீரர்கள், 21 விமானப்படை வீரர்கள்
ஆகியோர் உள்ளடங்குவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து
கடமைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்களுக்கு சட்டரீதியாக கடமையிலிருந்து
விலகுவதற்காக கடந்த ஆண்டு (2016) இரு முறைகள் பொதுமன்னிப்புக்காலம்
அறிவிக்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு
காலத்தைப் பயன்படுத்தி 34 அதிகாரிகள் மற்றும் 8843 படைவீரர்கள் சட்டரீதியாக
விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்திகள் >>
|