மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/8/2017 1:05:32 PM சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும்

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும்

[2017/03/08]

இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் முகங்கொடுத்துள்ள பாரிய சவாலான சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு பிராந்தியத்திலுள்ள நாடுகள் பொது உடன்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இன்று (07) முற்பகல் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் ஆரம்பமான இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெரும்பாலும் கடற்பாதைகளைப் பயன்படுத்துகின்றனர். நாடுகளின் இறையாதிக்கத்துக்குக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் வலயத்தில் இந்த கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்காக உரிய ஏற்பாடுகள் இல்லாதிருப்பது பாரிய சிக்கலாகுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதற்கு தீர்வு காணும் பொருத்தமான முறைமையை உருவாக்குவதற்கு இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் விரைவான கவனம் செலுத்த வேண்டுமென முன்மொழிந்தார்.

இப்போது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் கைத்தொழில் போன்று பரவியிருப்பது தொடர்பில் பிராந்திய அரச தலைவர்களின் கவனம் செலுத்த வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதிலும், திருப்தியடையக்கூடிய பெறுபேறு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு அண்மையிலுள்ள நாடுகளுக்கு பொருளாதார ரீதியில் பயன்கிட்டிய போதிலும், கப்பற்போக்குவரத்துக்களில் இடம்பெறும் பயங்கரவாத செயற்பாடுகள், கடற்கொள்ளை போன்ற குற்றங்கள் தொடர்பில் பிராந்தியத்திலுள்ள அனைத்து அரச தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம்மிக்க இடத்தில் இலங்கை அமைந்திருப்பது நாட்டின் வர்த்தகம், சுற்றுலா,

போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் உயர்ந்த பட்ச பயன்பாட்டை பெறக்கூடியவாறு பயன்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நன்றி : ஜனாதிபதி செய்தி ஊடகம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்