ஜனாதிபதி புட்டினிடமிருந்து இலங்கை ஜனாதிபதிக்கு வரலாற்றுப் பரிசு
[2017/03/24]
ரஷ்யாவில் மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி
கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்
அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (23) பிற்பகல்
இடம்பெற்றது. சந்திப்பின் விசேட நினைவாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன
அவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்கள் சிறப்பு பரிசொன்றை
வழங்கினார்.
19 ஆவது நூற்றாண்டுக்குரிய கண்டி யுகத்தின் அரச வாள்
விளாடிமிர் புட்டின் அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1906
ஆண்டளவில் பிரித்தானியாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட இந்த வாள் பிரித்தானியாவில்
நடைபெற்ற Sotheby எனப்படும் புராதனப் பொருட்கள் ஏல விற்பனையில் ரஷ்யாவினால்
கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.
இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவின் அடையாளமாக
இந்த புராதன வாள் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களால் இலங்கை ஜனாதிபதி
அவர்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
நன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம் |